Fire Accident at Poultry Farm: விழுப்புரத்தில் பயங்கரம்... கொத்து கொத்தாக கோழிகள் கருகி சாவு..!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணை திடீரென தீப்பிடித்துள்ளது.
ஜனவரி 23, விழுப்புரம் (Viluppuram): விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர், அதே பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். நேற்றிரவு, அங்கிருந்த பண்ணை கொட்டகையில் மேலே சென்ற மின் கம்பியில் இருந்து தீப்பொறி ஏற்பட்டுள்ளது. அது கூரையில் தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து பண்ணையே பற்றி எரித்துள்ளது. How To Dress Up A T-shirt?: பல விதங்களில் டீ சர்டுகள்... யார் யார் என்ன அணிந்தால் கச்சிதமாக இருக்கும்?.!
அக்கம்பக்கத்தினர் புகை வ்ருவதனைக் கண்டு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் சேவியர் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பண்ணையில் இருந்த 200 கோழிகள் கருகின. இச்சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jan 23, 2024 03:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

