Sex Assault On 12-Year-Old Girl: தோப்புக்குள் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சிலம்ப பயிற்சியாளர் கைது..!

கோவில்பட்டி அருகே சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சிலம்பம் பயிற்சியாளர் மாரிக்கண்ணனை காவல் துறையினர் கைது செய்தனர்.

Sex Assault On 12-Year-Old Girl: தோப்புக்குள் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சிலம்ப பயிற்சியாளர் கைது..!
Sexual Abuse / Rape Representational Image (Photo Credit: Pixabay)

மே 29, கோவில்பட்டி (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரி கண்ணன் (44). இவர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு சிலம்ப பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் 12 வயதுடைய சிறுமியை மாரிக்கண்ணன் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு (Sex Assault) செய்துள்ளார். Bus Accident in Pakistan: பாகிஸ்தானில் நடந்த கோர விபத்து.. 28 பேர் பலி..!

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோர்களிடம் தகவலை தெரிவித்துள்ளார். சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சிலம்பட்ட பயிற்சியாளர் மாரிகண்ணனை தீவிர தேடுதலுக்கு பின்னர் கைது செய்தனர்.

(The above story first appeared on LatestLY on May 29, 2024 01:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).