Kenya Gas Explosion: கியாஸ் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்து; 165 பேர் படுகாயம்.!

நைரோபி நகரில் செயல்பட்டு வரும் கியாஸ் நிலையத்தில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டு 165 பேர் படுகாயமடைந்து இருக்கின்றனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Kenya Explosion (Photo Credit: @BNO News)

பிப்ரவரி 02, நைரோபி (World News): கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா, நைரோபி நகரில் கியாஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. கியாஸ் நிலையத்தை சுற்றிலும் குடியிருப்புகளும் இருக்கின்றன. நூறுக்கும் அதிகமான பணியாளர்கள், அங்கு தொடர்ந்து வேலை பார்த்து வருகின்றனர். Heavy Fog in Delhi: டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு, மஞ்சு பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.! 

இந்நிலையில், இன்று திடீரென கியாஸ் (Nairobi Gas Explosion) நிலையத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் 165 பேர் படுகாயமடைந்து இருக்கின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பதைபதைப்பு காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.

மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement