Actor Karthi Casted Vote: “அனைவரும் வாக்களிக்க வேண்டும்.." ஜனநாயக கடமையாற்ற மக்களை அழைத்த நடிகர் கார்த்திக்..!
நடிகர் கார்த்திக் அவரது குடும்பத்தோடு வாக்கினை பதிவு செய்தார்.
ஏப்ரல் 19, சென்னை (Chennai): இந்திய நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் (Lok Shaba Elections 2024) ஆனது நாடு முழுவதும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா தேர்தல்கள் 2024-ன் வாக்கு பதிவானது இன்று தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக இன்று 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சரியாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. Actor Suriya Casted Vote: "மக்கள் வாக்களிப்பதற்கு முன் தங்கள் வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்" குடும்பத்தோடு நின்று வாக்களித்த நடிகர் சூர்யாவின் கருத்து..!
தொடர்ந்து மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கார்த்திக் (Actor Karthi) அவரது குடும்பத்தோடு சென்று அவரது வாக்கினை பதிவு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்திக், “அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும், இன்று விடுமுறை என்று நினைக்க வேண்டாம். மக்கள் தங்கள் வேட்பாளர்களை அறிந்து வந்து வாக்களிக்க வேண்டும்” எனக் கூறினார்.
#WATCH | Chennai, Tamil Nadu: After casting his vote, actor Karthi says, "Everyone should come and vote and not think that today is a holiday. People should know their candidates and come and vote."#LokSabhaElections2024 pic.twitter.com/ZrmaNzEUK1
— ANI (@ANI) April 19, 2024
(The above story first appeared on LatestLY on Apr 19, 2024 01:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

