Bigg Boss Tamil Season 8: "ஆண்களின் அடாவடி.. பறிக்கப்பட்ட சிம்மாசனம்.." வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கினால் போட்டியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.
நவம்பர் 21, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டடு, தற்போது 42 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். பிக் பாஸ் வீட்டில் தற்போது ஆனந்தி, அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சாச்சனா, சத்யா, ஷிவ குமார், சௌந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர். Keerthy Suresh Wedding: 15 வருட காதலுடன் திருமணம்.. கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் கோவாவில் திருமணம்..!
ராஜா ராணி டாஸ்க்: தற்போது ராஜா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சாச்சனா ராணியாகவும், ரானவ் ராஜாவாகவும் இருந்து வருகின்றார். காலையில் பல்லக்கை ஆண்கள் அணியினர் தட்டிப்பறித்த நிலையில், இதனால் பொங்கி எழுந்த ராணியின் கூட்டத்தினர் ராஜாவின் சிங்காசனத்தையே தட்டித் தூக்கியுள்ளனர். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியாகியுள்ள 3வது ப்ரொமோ பார்வையாளர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.
பறிக்கப்பட்ட ராஜாவின் சிம்மாசனம்:
(The above story first appeared on LatestLY on Nov 21, 2024 05:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

