Minor Girl Rape And Murder: 5 வயது சிறுமி பலாத்காரம் & கொலை.. 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட உடல்.. அதிர்ச்சி செயல்..!
மத்திய பிரதேசத்தில் 3 நாட்களாக காணாமல் போன சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 27, போபால் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், போபாலில் (Bhopal) இருந்து மூன்று நாட்களாக காணாமல் போன 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் (Rape) செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிறுமியின் உடல் தண்ணீர் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டது. ஃபோகிங் நடந்து கொண்டிருந்த போது, புகை மூட்டத்தை பயன்படுத்தி அதுல் பலாஸ் என்பவர் சிறுமியை வீட்டிக்குள் இழுத்து சென்றுள்ளார். அவர் அவளை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை (Murder) செய்துள்ளார். Minor Girl Rape: இன்ஸ்டாகிராம் பழக்கத்தினால் நடந்த விபரீதம்.. 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..!
இதுகுறித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இந்த சம்பவத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியின் தாயார் பசந்தி மற்றும் சகோதரி சஞ்சல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவாகியுள்ள அதுல் பலாஸை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 வயது சிறுமியின் உடல் மீட்கப்பட்ட வீடியோ:
मध्यप्रदेश : भोपाल से 3 दिन से लापता 5 वर्षीय बच्ची की रेप के बाद हत्या। पानी की टंकी में लाश छिपाई। जब फॉगिंग हो रही थी, तब उसी धुएं का फायदा उठाकर अतुल भालसे ने बच्ची को फ्लैट में खींच लिया। रेप किया, फिर गला घोंटकर हत्या की।
एक दिन तक लाश बिस्तर के बीच में रखी। जब मक्खियां हो… pic.twitter.com/Io8q9n7HWQ
— Sachin Gupta (@SachinGuptaUP) September 26, 2024
(The above story first appeared on LatestLY on Sep 27, 2024 12:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

