Viral Video: புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வீடியோ வைரலானதை அடுத்து டிஎஸ்பி கைது..!

கர்நாடகாவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ வைரலானதை அடுத்து டிஎஸ்பி கைது செய்யப்பட்டார்.

Viral Video: புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வீடியோ வைரலானதை அடுத்து டிஎஸ்பி கைது..!
Karnataka DSP Viral Video (Photo Credit: @MediaHindustani X)

ஜனவரி 04, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பாவகடா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நிலப்பிரச்சனை (Land Dispute) தொடர்பாக மதுகிரி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கும், துணை காவல் கண்காணிப்பாளராக (DSP) பணியாற்றி வந்த ராமசந்திரப்பாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, விசாரணை என்ற பெயரில், அந்த பெண்ணை தன்னுடைய அறைக்கு அழைத்து துணை காவல் கண்காணிப்பாளர் ராமசந்திரப்பா பாலியல் தொல்லை (Sexual Abuse) கொடுத்துள்ளார். Journalist Found Dead: இளம் பத்திரிக்கையாளர் செப்டிக் டேங்கில் சடலமாக மீட்பு.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

பெண்ணுக்கு பாலியல் தொல்லை:

இதனை ஜன்னல் வழியாக மறைந்து நின்ற அடையாளம் தெரியாத ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். மேலும், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, துணை காவல் கண்காணிப்பாளர் ராமசந்திரப்பாபு தலைமறைவானார். இச்சம்பவம் குறித்து ராமசந்திரப்பாபு இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், தலைமறைவாகி இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், இதுவரை எந்தவித புகாரும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

வீடியோ இதோ:

(The above story first appeared on LatestLY on Jan 04, 2025 07:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).