
ஏப்ரல் 23, பாபட்லா (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், பாபட்லா (Bapatla) மாவட்டம், சின்னகஞ்சம் மண்டலத்தில் கொத்தபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு மணிகண்ட ரெட்டி (வயது 21). அதே கிராமத்தை சேர்ந்த பக்கா ஜாஹ்னவி (வயது 18) ஆகிய இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். ராஜு மணிகண்ட ரெட்டி, ஓங்கோலில் ஐடிஐ 2ஆம் ஆண்டு படித்து வந்தார். ஜாஹ்னவி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். Pahalgam Terror Attack: பஹல்காம் தாக்குதல்; நொடியில் உயிர் தப்பிய சென்னை பெண்.. அதிர்ச்சி தகவல்..!
காதல் ஜோடி தற்கொலை:
இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தையும், ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களால் தங்கள் காதலைப் பற்றி பெற்றோரிடம் சொல்லத் தைரியம் இல்லை. தங்கள் காதல் விவகாரம் (Love Affair) வீட்டில் தெரிந்தால் திட்டுவார்கள் என்று பயந்து, நேற்று (ஏப்ரல் 22) கடவக்குதுரு ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை (Suicide) செய்துகொண்டனர்.
சோகத்தில் மூழ்கிய குடும்பம்:
இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சிதைந்து கிடந்த உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சிராலா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், இரு குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.