Fake Teacher Scandal: 10,000 போலி ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தும் தமிழக பள்ளிக்கல்வித்துறை? - உண்மை என்ன?.. அதிரடி விளக்கம்.!

பள்ளிகளில் 10 ஆயிரம் போலி ஆசிரியர்களைக் கொண்டு கற்பித்தல் பணி நடைபெறுவதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வித் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

Fake Teacher Scandal: 10,000 போலி ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தும் தமிழக பள்ளிக்கல்வித்துறை? - உண்மை என்ன?.. அதிரடி விளக்கம்.!
DPI (Photo Credit @backiya28 X)

நவம்பர் 14, சென்னை (Chennai News): கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் இராமியம்பட்டி நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த பாலாஜி ஒழுங்காக பள்ளிக்கு வராமல் தனக்கு பதிலாக வேறு ஒரு ஆசிரியரை நியமித்து பணியாற்றியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து பள்ளி கல்வித்துறையில் 10,000க்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்கள் பணிபுரிவதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், பள்ளிகளில் 10,000 போலி ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்துவதாக சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என தமிழக பள்ளிக் கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித் துறை மறுப்பு: இதுகுறித்து பள்ளிக்‌ கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "7.11.2024 நாளிட்ட செய்தித்தாளில்‌ வெளிவந்துள்ள செய்திக்‌ குறிப்பில்‌ தெரிவித்துள்ளபடி, தருமபுரி மாவட்டம்‌, அரூர்‌ கல்வி மாவட்டம்‌, காரிமங்கலம் ஒன்றியம்‌ இராமியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்‌ பள்ளியில்‌ பட்டதாரி ஆசிரியராகப்‌ பணிபுரிந்த பாலாஜி என்பார்‌, தனக்கு பதிலாக வேறொரு நபரைக்‌ கொண்டு வகுப்பறையில்‌ பாடம்‌ நடத்தியதால்‌ தற்காலிக பணி நீக்கம்‌ செய்யப்பட்டார்‌.

பள்ளியில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ கல்வி நலன்‌ பாதிக்கப்படுவதைத்‌ தவிர்க்கும்‌ பொருட்டு; ஆசிரியர்கள்‌ கற்றல்‌ கற்பித்தல்‌ பணிகளை மேற்கொள்ளாமல்‌ வெளி நபரைக்‌ கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல்‌ பணி நடத்துவது குறித்து, பள்ளி ஆண்டாய்வு மற்றும் பள்ளிப்‌ பார்வையின்போது ஏதேனும்‌ கண்டறியப்பட்டாலோ அல்லது இது குறித்த புகார்கள்‌ ஏதேனும்‌ பெறப்பட்டாலோ கண்டிப்பாக அப்புகார்‌ மீது தனிக்கவனம்‌ செலுத்தி மாவட்டக்‌ கல்வி அலுவலரே (தொடக்கக்‌ கல்வி), விசாரணை மேற்கொண்டு, அவ்விசாரணையில்‌ உண்மையிருப்பின்‌ சம்பந்தப்பட்ட ஆசிரியர்‌ மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு இறுதியாணை பிறப்பிக்கப்பட வேண்டும்‌. Retail Inflation Rises: ஐந்து மாதங்களில் இல்லாத அளவில் உயர்வு.. சில்லரை பணவீக்கம் அதிகரிப்பு..!

பள்ளிகளில்‌ இதுபோன்ற நிகழ்வுகள்‌ ஏற்படும்போது அத்தகவலை மாவட்டக்‌ கல்வி அலுவலருக்கு அளிக்கத்‌ தவறும்‌ பட்சத்தில்‌, தலைமை ஆசிரியர்‌ மற்றும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ ஆகியோர்‌ மீதும்‌ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்‌ என அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்‌ தொடக்கக்‌ கல்வி அலகில்‌ தகுதியுள்ள காலிப்பணியிடத்தில்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழுவின்‌ மூலம்‌ நியமனம்‌ பெற்ற 6053 எண்ணிக்கையில்‌ உள்ள தற்காலிக ஆசிரியர்கள்‌ தவிர, வேறு ஏதேனும்‌ நபர்கள்‌ பணிபுரிந்து வருகிறார்களா என அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களிடமும்‌ அறிக்கை கோரப்பட்டது.

இவ்வியக்ககச்‌ செயல்முறைகள்‌ அனுப்பப்பட்ட நிலையில்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலரின்‌ ஆளுகைக்கு உட்பட்ட வட்டாரக்‌ கல்வி அலுவலர்களிடமிருந்து வேறு நபர்களைக்‌ கொண்டு கற்பித்தல்‌ பணியில்‌ ஈடுபட்ட ஆசிரியர்கள்‌ குறித்த விவர அறிக்கை எதும்‌ பெறப்படவில்லை. ஆகையால்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்களிடமிருந்து எவ்வித அறிக்கையும்‌ பெறப்படாத நிலையில்‌, சமூக ஊடகங்களில்‌ வரப்‌ பெற்ற செய்தி முற்றிலும்‌ உண்மைக்கு மாறான செய்தியாகும்‌. அந்த செய்திக்‌ குறிப்பில்‌ குறிப்பிட்டவாறு 10,000 போலி ஆசிரியர்களைக்‌ கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல்‌ பணிகள்‌ நடைபெறவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை மறுப்பு:

(The above story first appeared on LatestLY on Nov 14, 2024 12:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).