Surgery During Earthquake: மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது திடீர் நிலநடுக்கம்.. பதற்றத்திலும் கடமையில் கண்ணாக பணி.!

வடமாநிலங்களை அதிரவைத்த நிலநடுக்கத்தின் அதிர்வு ஜம்முவிலும் நீடித்த நிலையில், மருத்துவர்கள் நிலநடுக்கத்தின்போதும் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

Surgery During Earthquake: மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது திடீர் நிலநடுக்கம்.. பதற்றத்திலும் கடமையில் கண்ணாக பணி.!
Visual from Viral Video (Photo Credit: Twitter)

மார்ச் 22, அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் (Anantnag) மாவட்டத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் (Afghanistan Pakistan Earthquake) நாடுகளில் உணரப்பட்ட நிலநடுக்கம், இந்தியாவின் பல வடமாநிலத்திலும் ஏற்பட்டது. டெல்லியிலும் (Delhi) நிலநடுக்கத்தின் அதிர்வலையால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பீஜ்பெஹ்ரா மருத்துவமனையில் (Bijbehara Earthquake) மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துகொண்டு இருந்தபோது திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு மின்விளக்குகள் மின்தடைபட்டு பின் ஒளிர்ந்தன. இப்படியான பரபரப்பு சூழலிலும் நோயாளியின் நிலைமையை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டனர். இதுகுறித்த வீடியோ வைரலாகியுள்ளது. Pakistan Earthquake: பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதால் அதிர்ச்சி., கட்டிடங்கள் இடிந்து விழுந்து 9 பேர் மரணம்., 100 பேர் படுகாயம்.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 22, 2023 09:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).