Car Hits School Bus: 30 மாணவர்களுடன் சென்ற பள்ளி பேருந்து மீது கார் மோதி விபத்து.. தெலங்கானாவில் பரபரப்பு..!
தெலங்கானாவில் பள்ளி மாணவர்களுடன் சென்ற பேருந்து மீது கார் மோதி மிகப்பெரிய விபத்துக்குள்ளானது.
ஜூன் 28, அனுமக்கொண்டா (Telangana News): இந்திய மாநிலமான தெலங்காணாவில் உள்ள அனுமக்கொண்டா மாவட்டத்தின், கமலாபூர் புறநகர்ப் பகுதியில் உள்ள பரகலா ஹுசூராபாத் பிரதான நெடுஞ்சாலையில், இன்று காலை 30 மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஏகசிலா பள்ளி வாகனமானது சென்றுக் கொண்டிருந்தது. அப்போது ஹன்மகொண்டா-கமலாபூர் (Hanmakonda-Kamalapur) மண்டல் மெயின் ரோட்டில் சாலையை கடக்கும் போது, பள்ளி பஸ் மீது கார் மோதியது. Heavy Rain In Delhi: வெளுத்து வாங்கும் கனமழை.. ஸ்தம்பித்துக் காணப்படும் தலைநகர் டெல்லி.. விமான நிலையத்தில் அரங்கேறிய விபத்து..!
இதில் காரில் பயணம் செய்த 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் 30 பேரில் இருவருக்கு மட்டும் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளது. கார் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு முக்கிய காரணம் என்று முதல்நிலை அறிக்கைகள் தெரிவிப்பதாக காவல் துறையினர்கள் கூறியுள்ளனர்.
ఘోర రోడ్డు ప్రమాదం.. స్కూలు బస్సును ఢీ కొట్టిన కారు
హన్మకొండ - కమలాపూర్ మండల కేంద్రంలో ప్రధాన రహదారిపై రోడ్డు క్రాస్ చేస్తుండగా ఏకశిలా స్కూలు బస్సును కారు ఢీకొట్టింది.. ప్రమాద ధాటికి స్కూలు బస్సు బోల్తా పడింది.
ప్రమాదం సమయంలో బస్సులో 30 మంది విద్యార్థులు ఉండగా ముగ్గురికి గాయాలు… pic.twitter.com/Uiqs63Y2Sb
— Telugu Scribe (@TeluguScribe) June 28, 2024
(The above story first appeared on LatestLY on Jun 28, 2024 11:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

