Hanging Suicide File Pic (Photo Credit: Pixabay)

மார்ச் 04, கலபுரகி (Karnataka News): கர்நாடக மாநிலம், கலபுரகி (Kalaburagi) நகரின் மஹாதேவநகரில் வசித்தவர் ராகேஷ் (வயது 30). இவர், நான்கு மாதங்களுக்கு முன்பு மேக்னா (வயது 25) என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேக்னா, சிறு சிறு விஷயங்களுக்கும் கூட கணவருடன் தகராறு செய்தார். தான் சொற்படியே நடக்க வேண்டுமென, பிடிவாத குணம் கொண்டவர். Groom Slapped The Bride: மணமேடையில் பளார் விட்ட மணமகன்.. அதிர்ச்சியில் உறைந்த மணமகள்.., கலவரமான திருமண விழா..!

கணவர் தற்கொலை:

வீட்டில் தினமும் வீடு துடைப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகளை செய்யும்படி கணவருக்கு தொல்லை கொடுத்தார். வீட்டு வேலை செய்யாவிட்டால், காவல்நிலையத்தில் பொய் புகார் அளிப்பதாகவும் மிரட்டி வந்துள்ளார். மனைவியின் தொல்லையால் மன வேதனையடைந்த ராகேஷ், நேற்று (மார்ச் 03) காலை வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை (Suicide)செய்துகொண்டார்.

காவல்துறையினர் விசாரணை:

இதனையடுத்து, ராகேஷின் பெற்றோர் மேக்னா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலபுரகி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.