Playing Loud Music During Azaan: பாங்கு ஒலித்தபோது அதிக சத்தத்தில் பாடல் கேட்ட கடையின் உரிமையாளர்; கைகலப்பில் முடிந்த வாக்குவாதம்.!

கடை உரிமையாளர் ஒருவர் பாங்கு ஒலி எழுப்பியபோது இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இருதரப்பு இடையே வாக்குவாதம் உண்டாகி மோதல் சம்பவம் நடைபெற்றது.

Playing Loud Music During Azaan: பாங்கு ஒலித்தபோது அதிக சத்தத்தில் பாடல் கேட்ட கடையின் உரிமையாளர்; கைகலப்பில் முடிந்த வாக்குவாதம்.!
Bangalore Azaan Loud Music Fight (Photo Credit: @nabilajamal_ X)

மார்ச் 18, பெங்களூர் (Bangalore News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், சித்தண்ணா லே-அவுட் பகுதியில் மசூதி ஒன்று செயல்பட்டு வருகிறது. மசூதி இருக்கும் பகுதியில் வணிக வளாகங்களும் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் மசூதியில் பிரார்த்தனைக்கான அழைப்பு விடுக்கப்பட்டு பாங்கு ஒலிக்கப்பட்டுள்ளது. அச்சமயம், அங்கு கடை வைத்து நடத்தி வரும் ஒருவர், வேறொரு இசையை சத்தமாக வைத்து கேட்டதாக தெரியவருகிறது. Man Puts 11 Rings in Penis: இப்படியுமா பண்ணுவாங்க?... ஆணுறுப்பில் 11 மோதிரங்கள் திணித்து சுயஇன்பம்; இளைஞரின் விபரீத செயல்..! 

இருதரப்பு மோதல்: இதனால் அதிருப்தியடைந்த இளைஞர்கள் குழு ஒன்று, கடைக்காரரிடம் சென்று வாதம் செய்துள்ளது. இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறவே, கடைக்கு வந்த இளைஞர்கள் குழு கடையின் உரிமையாளரை கடுமையாக தாக்கியது. தற்போது இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற ஹலாசுரு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பதைபதைப்பு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.

(The above story first appeared on LatestLY on Mar 18, 2024 01:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).