Thalapathy Vijay in Kerala: 14 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா.. ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்த நடிகர் விஜய்..!

வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கோட்’ படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Thalapathy Vijay in Kerala: 14 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா.. ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்த நடிகர் விஜய்..!

மார்ச் 18, திருவனந்தபுரம் (Cinema News): நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் நடித்து வருகிறார். இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் கேரளாவின் திருவனந்தபுரத்தில் படமாக்கப்பட உள்ளது. இதனால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் கேரளா சென்றடைந்தார். விஜய்யை பார்க்க, பல ஆயிரம் ரசிகர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூடினர். அவர்களை பார்த்து புன்னகைத்தபடியே விஜய் தனது காரில் ஏறி சென்றார். விஜயின் காரை நாலாபுறமும் சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவரை செல்ல விடாமலும் தடுத்தனர். இதனையடுத்து நடிகர் விஜய் பெரும் சிரமத்திற்கு பிறகு ஹோட்டலை அடைந்தார். Kareena Kapoor Confirms Kannada Debut: தென்னிந்தியாவில் களம் இறங்கும் "சமக் சலோ".. யாஷுடன் நடிக்கப் போகும் கரீனா கபூர்..!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 18, 2024 08:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).