Lorry Car Collision 4 Died: லாரி - கார் நேருக்கு நேர் மோதி, அப்பளமாக நொறுங்கி பயங்கர விபத்து; நண்பர்கள் 4 பேர் பரிதாப பலி..!

தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் பயணித்து லாரி - கார் மோதிக்கொண்ட விபத்தில், நண்பர்களான 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோகம் தான்பாத் நகரில் நடைபெற்றுள்ளது.

Dhanbad Accident Jharkhand (Photo Credit: @PTI_India X)

ஜூன் 19, தான்பாத் (Jharkhand News): ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தான்பத் மாவட்டம், லோஹர்பரவா, ஜிடி சாலை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு லாரி - கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டு பயங்கர விபத்து ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் வந்த லாரியும், முன்னோக்கி பயணித்த காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 நண்பர்கள் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். கார் மோதிய வேகத்தில் அப்பளம் போல நொறுங்கியதால், உடல் பாகங்கள் நசுங்கி உயிர்பலி ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பின்னரே லாரி எதிர்திசையில் பயணித்ததால் விபத்து நடந்து நால்வர் பலியான சோகம் உறுதியானது. லாரி மற்றும் அதன் ஓட்டுனரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். Instagram Famous Girl Suicide after Breakup Troll: காதல் தோல்வியை கலாய்த்ததால் இன்ஸ்டா பிரபலம் மனமுடைந்து தற்கொலை.. எக்ஸ் காதலன் போக்ஸோவில் கைது.! 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement