மே 02, பெங்களூர் (Bangalore News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், வில்சன் கார்டனில் நேற்று விபத்து ஒன்று நடந்துள்ளது. அவசர ஊர்தி சாலையோர வாகனங்கள், பாதசாரிகள் மீது தறிகெட்டு மோதியதில் பல வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் 49 வயதுடைய ரமேஷ் என்பவர் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அவசர ஊர்தி ஓட்டுநர் சிரஞ்சீவி (32) இயக்கி வந்த வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. மேற்படி வில்சன் கார்டன் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 13 வயது மாணவருடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை 5 மாத கர்ப்பம்..!
பெங்களூரில் நடந்த சாலை விபத்தின் பதறவைக்கும் காணொளி:
View this post on Instagram
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)