Crocodile Found Near Village: குடியிருப்பு பகுதியில் புகுந்த முதலை; அலேக்காக தூக்கி ஆற்றில் விட்ட வனத்துறை.!
ஆற்றுக்குள் இருந்து கால்வாய் வழியே குடியிருப்பு நோக்கி வந்த முதலையை மீட்ட அதிகாரிகள், அதனை ஆற்றுக்குள் மீண்டும் விட்டனர்.
மே 30, புலந்த்சாகர் (Uttar Pradesh News): கங்கை நதிக்கரையோரம் அமைந்துள்ள உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களில், முதலைகள் நடமாட்டம் என்பது அதிகம். அவ்வப்போது இவை கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்துகொள்வதும் வாடிக்கையான ஒன்றாகும். இதுகுறித்த தகவல் கிடைக்கப்பெற்றால், வனத்துறை அதிகாரிகள் முதலைகளை பிடித்துச்சென்று மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு சென்று ஆற்றுக்குள் விடுவார்கள். இந்நிலையில், புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள நரோரா கங்கா காடுகளை ஒட்டியுள்ள கால்வாயில் 10 அடிநீளமுள்ள முதலை ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து, தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், முதலையை அலேக்காக தூக்கி ஆற்றுக்குள் சென்று விட்டனர். Gold Smuggling Case: காங்கிரஸ் தலைவர் சசி தரூருக்கு புதிய சிக்கல்? தங்கக்கடத்தில் வழக்கில் பிஏ கைது., அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!