அக்டோபர் 01, ஜம்மு (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு பின் அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலானது நடைபெறுகிறது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கும்போதிலும், அவர்களை இராணுவத்தின் தேடுதல் வேட்டையில் சுட்டுக்கொன்று, அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அக்.01ம் தேதியான இன்று மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மூன்று கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தேர்தலில், முதல் இரண்டு கட்டங்கள் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்தன. இன்று எஞ்சியுள்ள 40 தொகுதிகளில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு, காலை 07:00 மணிமுதல் விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெறுகிறது. மக்கள் பலரும் வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். Tragic Accident: கார் விபத்தில் திறந்த ஏர்பேக்.. மூச்சுத்திணறி துடி துடித்து இறந்த 2 வயது குழந்தை..! 

ஆர்வத்துடன் வாக்களிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தரும் மக்கள்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)