கணவனை ஆற்றில் தள்ளிவிட்ட மனைவி.. கொலை செய்ய முயன்றதாக கரையேறி கதறிய வீடியோ.!

ராய்ச்சூரில் கிருஷ்ணா நதிக்கு சுற்றுலா சென்றபோது மனைவி தனது கணவரை ஆற்றில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கணவனை ஆற்றில் தள்ளிவிட்ட மனைவி.. கொலை செய்ய முயன்றதாக கரையேறி கதறிய வீடியோ.!
Raichur Wife Tries to Kill Husband (Photo Credit : @TeluguScribe X)

ஜூலை 13, கர்நாடகா (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டம் கட்லூர் பகுதியில் வசித்து வருபவர் தாயப்பா. இவரது மனைவி சின்னி. தம்பதிகளுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இவர்கள் இருவரும் கிருஷ்ணா நதிக்கு சுற்றுலா சென்ற நிலையில், செல்பி எடுத்த போது மனைவி சின்னி திடீரென கணவரை ஆற்றல் தள்ளிவிட்டுள்ளார். தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடிய தாயப்பா, அக்கம் பக்கத்தினரால் பத்திரமாக மீட்கப்பட்டார். அப்போது தனது மனைவி தன்னை கொலை செய்யும் நோக்கத்துடன் தள்ளிவிட்டதாக கூறியவர், காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்குமாறு மன்றாடியுள்ளார். அதனை தொடர்ந்து தகவலறிந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Trending Video: இளம் ஜோடியை ஏரில் பூட்டி, பிரம்பால் அடித்து தண்டனை.. அத்தை மகனை மணந்ததால் கொடூரம்.! 

கணவரை உள்ளூர் மக்கள் மீட்ட வீடியோ :

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 17, 0234 05:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).