Lorry - Auto Rickshaw Crash: ஆட்டோ மீது லாரி மோதி பயங்கர விபத்து: பச்சிளம் குழந்தை உட்பட 6 பேர் பலி.. ஆத்திரத்தில் லாரியை கொளுத்திய மக்கள்.!

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்திற்குள்ளானதில் பச்சிளம் குழந்தை உட்பட 6 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

Lorry - Auto Rickshaw Crash: ஆட்டோ மீது லாரி மோதி பயங்கர விபத்து: பச்சிளம் குழந்தை உட்பட 6 பேர் பலி.. ஆத்திரத்தில் லாரியை கொளுத்திய மக்கள்.!
Truck Auto Collision Anger Peoples Fire (Photo Credit: @jsuryareddy X)

ஜனவரி 06, மஹபூப் நகர் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகபூப் நகர் மாவட்டம், பாலா நகர், சௌராஷ்டிரா பகுதியில் நேற்று மாலை ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பச்சிளம் குழந்தை ஒன்றும் விபத்தில் பலியானது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், விபத்தை ஏற்படுத்திய லாரியை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிகொள்ளவே, விரைந்து வந்த அதிகாரிகள் மக்களை கட்டப்படுத்தினர். விபத்தில் உயிரிழந்தோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இதுகுறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்களில் சிலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. Hollywood Actor Died: விமானம் கடலில் விழுந்து நொறுங்கி சோகம்: பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் உட்பட 4 பேர் மரணம்..! 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 06, 2024 11:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).