செய்யாத தவறுக்கு கேஸ் வாங்கி வாழ்க்கையை இழந்த கூமாபட்டி தங்கபாண்டி?.. அதிர்ச்சி தகவல்.!
எனது தம்பிக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபருக்கு இடையே நடந்த தகராறு காரணமாக, என்மீதும் புகார் கொடுத்ததால் வாழ்க்கையில் கஷ்டப்படுவதாக கூமாபட்டி தங்கபாண்டி (Koomapatti Thangapandi) கூறினார்.
ஜூலை 05, கூமாபட்டி (Virudhunagar News): ஏங்க கூமாபட்டிக்கு வாங்க என இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்த இளைஞர் தங்கபாண்டி, தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், "காவல்துறை / வனத்துறை அதிகாரி பொறுப்புக்கு சென்று பணியாற்ற வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால், எனது தம்பிக்கும், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் இடையே பிரச்சனை நடந்தது. இந்த பிரச்சனையில் எனது பெயரையும், தங்கையின் பெயரையும் சேர்த்து கொடுத்துவிட்டார்கள். இதனால் வந்த வழக்கு அரசு வேலைக்கு முடுக்குபோட்டுவிட்டது. ரூ.150 பணம் இல்லாததால் குற்றாலம் செல்லலாம் என அழைத்த நண்பர்கள் என்னை நடுத்தெருவில் இறக்கிவிட்டு சென்றனர். தற்கொலை செய்ய பிளவக்கல் அணைக்கு சென்றபோது, விவேகானந்தரின் வாசகம் ஒன்று பேப்பரில் இருந்தது. அதுவே இன்று எனது ஊரை பிரபலப்படுத்த காரணமாக இருந்தது" என கூறியுள்ளார்.
கூமாபட்டி தங்கபாண்டி பேசிய காணொளி (Koomapatti Thangapandi Interview):
Video Credit & Thanks : Arrowroots Tamil
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)