நவம்பர் 06, குடியாத்தம் (Vellore News): வேலூர் மாவட்டம் குடியாத்தம், வரதாரெட்டி பகுதியில் வசித்து வருபவர் ஜெய்சங்கர். இவருக்கு கீர்திஷா என்ற 4 வயதுடைய குழந்தை இருக்கிறார். சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையே, இன்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி, பேருந்தில் இருந்து இறங்கி இருக்கிறார். அப்போது, எதிர்பாராத விதமாக பேருந்தின் சக்கரத்தில் சிக்கவே, சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த குழந்தையின் சடலத்தை பார்த்தபடி குடும்பத்தினர் கதறியழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. K. A. Sengottaiyan: 53 ஆண்டுகால அரசியல் பயணம்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆப்பு சீவிய கே.ஏ. செங்கோட்டையன்? பரபரப்பு பேட்டி..! 

மகளை இழந்த தவிப்பில் கதறிய உறவினர்கள்:

வீடியோ நன்றி: தந்தி தொலைக்காட்சி

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)