Indian Student Dies: 18 வயது இந்திய மாணவர் மயங்கி விழுந்து மரணம்.. தீபாவளி கொண்டாட்டத்தில் சோகம்.!

துபாயில் தீபாவளி கொண்டாட்டத்தில் 18 வயது இந்திய மாணவர் வைஷ்ணவ் மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

Indian Student Dies: 18 வயது இந்திய மாணவர் மயங்கி விழுந்து மரணம்.. தீபாவளி கொண்டாட்டத்தில் சோகம்.!
Vaishnav Krishnakumar (Photo Credit : LinkedIn)

அக்டோபர் 24, துபாய் (World News): கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனது குடும்பத்துடன் துபாயில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் வைஷ்ணவ் கிருஷ்ணகுமார் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பிபிஏ பயின்று வருகிறார். 18 வயதான இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசாவும் பெற்றுள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று துபாய் சர்வதேச கல்வி நகரில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் வைஷ்ணவ் கலந்து கொண்டதாக தெரிய வருகிறது. கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர் திடீரென மயங்கி விழவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முன்னதாகவே இறந்துவிட்டதாக தெரிவித்து இருக்கின்றனர். மேலும் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Mosquitoes in Iceland: ஐஸ்லாந்தையும் விட்டுவைக்காத கொசுக்கள்.. பெருமையை இழந்த நாடு.. ஆய்வாளர்கள் ஷாக் தகவல்.!

தீபாவளி கொண்டாட்டத்தில் மரணம்:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).