Israel Palestine War: தாய்-தந்தை, உறவினர்களை இழந்து தனிமையில் வாடும் 17000 குழந்தைகள்; 5 மாத போரில் நடந்த சோகம்.!
5 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய போர் தற்போது வரை நடைபெற்று வரும் நிலையில், 17 ஆயிரம் குழந்தைகள் அனாதையாக்கப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி 03, காசா (World News): இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த அக்.07, 2023 முதல் போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்கு எதிராக போரை தொடங்கிய ஹமாஸ் (Israel - Palestine's Hamas War) முதலில் 1500 இஸ்ரேலியர்களை கொடூரமாக கொலை செய்தது. போரில் இஸ்ரேல் முழு அளவிலான பலத்துடன் இறங்கியதால், பாலஸ்தீனத்தில் இருக்கும் காசா நகரம் முற்றிலும் அழிக்கப்பட்டு வருகிறது. அங்கு தற்போது வரை 26,637 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 16,000 க்கும் அதிகமான குழந்தைகளும் அடங்குவார்கள். பாலஸ்தீனத்தில் உள்ள மக்களுக்கு உலக நாடுகள் மனிதாபிமான மருத்துவ, அத்தியாவசிய பொருட்கள் உதவியை செய்து வருகிறது. ஐ.நா மற்றும் உலக சுகாதார அமைப்பும் போரை நிறுத்த தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்நிலையில், ய்ப்பூரினால் 17 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனிய குழந்தைகள் தங்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை முற்றிலுமாக இழந்து ஆதரவற்றவர்களாக மாறி இருக்கின்றனர். இவர்கள் ஐ.நா முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். போர் தொடங்கிய 5 மாதத்திற்குள் இச்சோகம் நடந்துள்ளது. Chile Forest Fire: சிலியில் திடீர் காட்டுத்தீ; 10 பேர் பலி., 1000 வீடுகள் தீயில் நாசம்.!
At least 17,000 #children in the #GazaStrip are now either unaccompanied by or separated from their parents or relatives, the #UnitedNations (UN) has estimated.
(Representational Image) pic.twitter.com/F7MMB8y2jZ
— IANS (@ians_india) February 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 03, 2024 10:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

