MS Dhoni: ஓய்வுக்கா?.. அதுக்கு இன்னும் பல காலம் இருக்கே.. மாஸ் காண்பித்த தல தோனி..! கொண்டாடும் ரசிகர்கள்.!
தனது ஓய்வு குறித்து சூட்சமாக மனம்திறந்த எம்.எஸ் தோனி, இறுதி வரை அதனை தெரிவிக்காமலேயே பேட்டியை முடித்துக்கொண்டார்.
மே 24, சேப்பாக்கம் (Cricket News): சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி தோல்வியடைந்த நிலையில், சென்னை அணி 10வது முறையாக பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
பிளே ஆப் போட்டிக்கு சென்னை தேர்வானது அணியின் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய தோனி, "எனது ஓய்வு குறித்து எனக்கே தெரியாது. அதனால் இப்போது அவை பற்றி யோசிக்க வேண்டாம். Firecrackers Explodes: திருவிழா பட்டாசு உயிர் பறித்த சோகம்; சிறுவன் உட்பட 2 பேர் பரிதாப பலி.!

எதுவாக இருந்தாலும் விளையாட்டிலும் சரி, வெளியே உட்காரும்போது சரி சென்னை அணிக்காக நான் இருப்பேன். வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால், நான் பார்மில் இல்லை. ஐ.பி.எல் ஏலம் தொடங்க 8 முதல் 9 ஆண்டுகள் இருக்கின்றன" என பேசினார்.
(The above story first appeared on LatestLY on May 24, 2023 02:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

