RCB Vs PBKS IPL Final 2025: கொத்து கொத்தாக விக்கெட்களை பறிகொடுத்த ஆர்சிபி.. பஞ்சாப் வெற்றி பெற 191 ரன்கள் இலக்கு..!
ஐபிஎல் 2025 தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டியில், ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 190 ரன்கள் அடித்துள்ளது.
ஜூன் 03, அகமதாபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிந்து, புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதனையடுத்து நடந்த பிளே ஆப் சுற்று முடிவில், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (RCB Vs PBKS, IPL 2025 Final) அணி இறுதிப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. Virat Kohli Wicket: நிதானமாக விளையாடிய விராட் கோலி அவுட்.. ஓமர்சாய் அசத்தல் கேட்ச்..!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ எதிர் பஞ்சாப் கிங்ஸ் (Royal Challengers Bangalore Vs Punjab Kings):
இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பில் சால்ட் 16 ரன்னில் நடையை கட்டினார். அடுத்து வந்த மயங் அகர்வால் (24 ரன்கள்) சஹால் சுழலில் சிக்கினார். இதனையடுத்து, கேப்டன் ரஜத் பட்டிதார் (26 ரன்கள்) கைல் ஜேமிசன் பந்தில் அவுட் ஆனார். மறுபுறம், நிதானமாக விளையாடி வந்த விராட் கோலி (35 பந்துகள் 43 ரன்கள்) ஓமர்சாய் பந்தில் அவரது சிறப்பான கேட்ச்சால் விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில், லிவிங்ஸ்டன் 25, ஜித்தேஷ் சர்மா 24, ரோமரியோ 17 ரன்கள் ஆகியோரின் அதிரடியால், ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 190 ரன்கள் அடித்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Jun 03, 2025 09:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

