School College Holiday: பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. ரெட் அலர்ட் எச்சரிக்கையால் உத்தரவு.!

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக டெல்டா, வங்கக்கடலோர மாவட்டங்கள் கடும் மழையை எதிர்கொள்கின்றன.

School College Holiday: பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. ரெட் அலர்ட் எச்சரிக்கையால் உத்தரவு.!
School, College Holiday due to Rain (Photo Credit: @Sriramrpckanna1 X)

நவம்பர் 26, நாகப்பட்டினம் (Nagapattinam News): இலங்கையையொட்டிய வங்கக்கடல் பகுதியில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை, தமிழ்நாடு நோக்கி நகருவதால், நேற்று இரவு முதல் வரும் 4 நாட்களுக்கு மாநிலத்தில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா, வங்கக்கடலோர மாவட்டங்களில் கனமழை அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. Couple Dies by Suicide: காதல் திருமணம் முடிந்த 2 மாதத்தில் தம்பதிகள் தற்கொலை.. திருவாரூரில் கண்ணீர் சோகம்.! 

இன்றைய வானிலை (Today Weather):

நவ.26. 2024ம் தேதியான இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ அதி கனமழையும்‌, ஒருசில இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, விழுப்புரம்‌, கடலூர்‌, அரியலூர்‌, தஞ்சாவூர்‌, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவையில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, ராமநாதபுரம்‌, திருச்‌சிராப்பள்ளி, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்‌சி மற்றும்‌ செங்கல்பட்டு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதலே பல இடங்களில் திடீர் மழையும் பெய்தது. Reporter Dies: 33 வயதில் பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்.. தந்தையை இழந்து தவித்தவர், உடல்நலக்குறைவால் மரணம்.! 

பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை (School Colleges Leave Today):

இந்நிலையில், கனமழை எச்சரிக்கை மற்றும் விடிய-விடிய வெளுத்து வாங்கிய மழை காரணமாக நேற்றே நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து, தற்போது புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கும் விடுப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், திருச்சி பாரதிதாசன் பல்கலை., பருவத்தேர்வுகளும் ஒத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Nov 26, 2024 06:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).