Ulunthurpet Shocker: நள்ளிரவில் கரும்புகை.. வீட்டிற்குள் உடல் கருகி பிணமாக இருந்த தந்தை-மகள்-பேத்திகள்.. உளுந்தூர்பேட்டையில் சோகம்.!
கரும்புகை கிளம்பிய வீட்டை அக்கம் பக்கத்தினர் பதற்றத்துடன் எட்டிப்பார்த்தபோது, 3 பேர் உடல் கருங்கியும், ஒருவர் மயங்கி விழுந்தும் உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
செப்டம்பர் 30, உளுந்தூர்பேட்டை (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, நத்தாமூர் கிராமத்தில் வசித்து வருபவர் பொன்னரங்கன். இவருக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் என ஐந்து குழந்தைகள் இருக்கின்றனர்.
பொன்னுரங்கன் தனது மகன்களுடன் அதே ஊரில் உரக்கடை வைத்தும் நடத்தி வருகிறார். இவரின் மகள் திரவியம், திருமணம் முடிந்து தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில், அவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மனநலம் பாதிக்கப்பட்டதால், தனது தந்தையின் ஊரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் திரவியத்தின் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. பதறிப்போன அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து உள்ளேசென்று பார்த்தபோது, திரவியம் தனது குழந்தைகளான ஐந்து வயதுடைய ரியாஷினி மற்றும் 3 வயதுடைய விஜயகுமாரியுடன் உடலில் தீப்பற்றி எரிந்து சடலமாக கிடந்தார். Sambar Satham: சுவைமிகுந்த சாம்பார் சாதம் செய்வது எப்படி?.. புரட்டாசி ஸ்பெஷல்.. விபரம் உள்ளே.!
திரவியத்தின் தந்தை பொன்னுரங்கன் உடலில் எவ்வித தீக்காயமும் இன்றி மயங்கி கிடந்தார். சம்பவம் தொடர்பாக திருநாவலூர் காவல் துறையினருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பொன்னுரங்கனை சோதித்தபோது, அவரின் உயிரிழப்பும் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, நால்வரின் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திரவியம் தனது மகள்களுடன் தற்கொலை செய்ய முயற்சித்து இருக்கலாம். அவர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய பொன்னுரங்கன், கரும்புகை வீரியத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
அதேவேளையில், இவர்கள் கொலை செய்யப்பட்டனரா? அல்லது தற்கொலை தானா? என பலகோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருநாவலூர் காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)