Sexual Harassment (Photo Credit: @Sriramrpckanna1 X)

ஆகஸ்ட் 09, சென்னை (Chennai News): சென்னை கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்த 13 வயது சிறுமி, 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி, நேற்று காலை முல்லை நகர் வழியாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, கஞ்சா போதையில் அவ்வழியாக வந்த ஒருவர், சிறுமியை வழிமறித்து, பாலியல் தொல்லை (Allegedly Molested) கொடுத்துள்ளார். பயத்தில் சிறுமி அலறியுள்ளார். 13-Year-Old Girl Performs Bharatnatyam For 3 Hours: வயநாடு நிலச்சரிவு.. தொடர்ந்து 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி நிதி திரட்டிய 13 வயது சிறுமி..!

அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அந்த நபரை பிடித்து, அடித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், வியாசர்பாடியை சேர்ந்த சுந்தர் (வயது 35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.