Alanganallur Jallikattu 2025: அலற விட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. முதல் 3 இடங்களைப் பிடித்த வீரர்கள் லிஸ்ட் இதோ.!

மதுரை அலங்காநல்லூரில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், ஆயிரம் காளைகள் பங்கேற்றுள்ளன.

Alanganallur Jallikattu 2025: அலற விட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. முதல் 3 இடங்களைப் பிடித்த வீரர்கள் லிஸ்ட் இதோ.!
Jallikattu Bulls (Photo Credit: Instagram)

ஜனவரி 16, அலங்காநல்லூர் (Madurai News): தைப்பொங்கல் 2025 பண்டிகை நேற்று முதல் சிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மாநில அளவில் 6 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழர்களின் அறுவடை திருநாளாகவும், உழவுக்கும்-மக்களுக்கும் உறுதுணையாக இருக்கும் கதிரவனை போற்றி கொண்டாடப்படும் சூரியப்பொங்கல் எனப்படும் தைப்பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மாட்டுப்பொங்கல் 2025 பண்டிகை சிறப்பிக்கப்பட்டது. இன்று காணும் பொங்கல் 2025 பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு (Avaniyapuram Jallikattu):

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு (Avaniyapuram Jallikattu) நேற்று மதுரை மாநகரில் உள்ள அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் சாலையில், ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் கார்த்திக் 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். குன்னத்தூர் அரவிந்த் திவாகர் 15 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தையும், 13 காளைகளை அடக்கி திப்புவனம் முரளிதரன் 3ஆம் இடத்தையும் பிடித்தனர். சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசை உரிமையாளரான பொன்னமவராதியை சேர்ந்த மலையாண்டி பெற்று சென்றார். முதல் பரிசு பெற்ற கார்த்திக்கு கார் வழங்கப்பட்டது. Harassment Over Skin Color: படிக்கும் வயதில் திருமணம்.. நிறத்தை காண்பித்து சித்ரவதை., 19 வயது கல்லூரி மாணவி விபரீதம்.!

பாலமேடு ஜல்லிக்கட்டு (Palamedu Jallikattu 2025):

நேற்று மதுரை பாலமேட்டில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், ஆயிரம் காளைகள் பங்கேற்றுள்ளன. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கி நத்தம் பார்த்திபன் முதலிடம் பிடித்தார். மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசி 12 காளைகளை அடக்கி 2ம் இடத்தை பிடித்தார். பொதும்பு பிரபாகரன் 11 காளைகளை அடக்கி 3வது இடம் பிடித்தார். மலையாண்டி என்பவரின் காளை, சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக மலையாண்டிக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. ஜி.ஆர்.கார்த்தி என்பவரின் காளைக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு (Alanganallur Jallikattu):

இன்று மதுரை அலங்காநல்லூரில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், ஆயிரம் காளைகள் பங்கேற்றுள்ளன. அதில் 20 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்த வீரர் அபிசித்தருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 13 காளைகளை பிடித்த பொதும்பு ஸ்ரீதர் இரண்டாம் இடத்தையும், 10 காளைகளை தழுவிய மடப்புரம் விக்னேஷ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

(The above story first appeared on LatestLY on Jan 16, 2025 06:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).