Stock Market Crash: லஞ்சம் கொடுத்த கௌதம் அதானி: சரிந்த பங்குகள்.. அதலபாதாளம் சென்ற இந்திய பங்குச்சந்தை..!

தேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.

Stock Market (Photo Credit: Pixabay)

நவம்பர் 21, டெல்லி (Technology News): இந்தியப் பங்குச் சந்தையின் (Stock Market) முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று பெரும் சரிவுடன் துவங்கியுள்ளது. பங்குச்சந்தை குறியீடான பிஎஸ்இ சென்செக்ஸ் 765 புள்ளிகள் அல்லது 1% குறைந்து 76,813 ஆக வர்த்தகமாகி வருகிறது. காலை 9:42 மணியளவில் நிஃப்டி 50, 218 புள்ளிகள் அல்லது 0.93% குறைந்து 23,299 ஆக வர்த்தகமாகி வருகிறது.

காரணம்: உலகளவில் மிகப்பெரிய தொழிலதிபர் கெளதம் அதானி (Gautam Adani). அதானி குழுமம் (Adani Groups) இந்தியாவில் பல்வேறு முதலீடுகளை வழங்கி தொழில் செய்து வரும் நிலையில், சமீபத்தில் செபி (SEBI) பங்குச்சந்தை விவகாரத்தில் சிக்கி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இந்நிலையில், ரூ.16,000 கோடி இலாபம் பெரும் வகையிலான சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தினை பெற, அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு மொத்தமாக ரூ.2,100 கோடி இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்திய அமெரிக்க நீதிமன்ற கெளதம் அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின் உட்பட 7 பேரை குற்றவாளி என அறிவித்து, அவர்களுக்கு எதிராக பிடிவாரண்டும் பிறப்பித்து இருக்கிறது. இதனால் இந்தியப் பங்குச் சந்தையில் அதானி குழுமப் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே தேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது. Integrated Ombudsman Scheme: வங்கிக்கு போனா சரியா கவனித்து ரெஸ்பான்ஸ் பண்ணலயா? புகார் அளிப்பது எப்படி? விபரம் உள்ளே..!

அதானி குழுமத்தின் குற்றச்சாட்டு: ஏற்கனவே அதானி குழுமத்தின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தது ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம். அதானி குழுமம், கடந்த ஆண்டு ஜனவரி 27 முதல் ஜனவரி 31 வரை தொடர் பங்கு வெளியீடு மூலம் 20,000 கோடி திரட்ட தனது பங்குகளை குறைந்தபட்ச விலையாக ரூ.3112 எனவும், அதிகபட்ச விலையாக ரூ.3276 ஆகவும் நிர்ணயத்திருந்தது. அறிக்கை வெளியான நாளிலேயே அதானி குழுமத்தின் பங்குகள் 5% முதல் 8% வரை சரிவைக் கண்டது.

அமெரிக்கவிலுள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் பற்றிய 103 பக்க ஒரு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது ஒரு ஷார்ட் செல்லிங் நிறுவனமாகும். அதானி நிறுவனத்தின் உண்மையான மதிப்பிலிருந்து 85% அதிகமாக இருப்பதாக அந்த அறிக்கை கூறியது. மேலும் அதானியின் அதிக கடன்கள் குறித்தும் பல்வேறு விதமான 88 கேள்விகளை மொத்தமாக முன்வைத்துள்ளது ஹிண்டன்பர்க் நிறுவனம். மேலும் கடந்த 2 ஆண்டுகளில் அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 10 முதல் 20 மடங்கு உயர்ந்துள்ளது. அதீத கடன்கள் பற்றியும் மற்றும் அரசிடமிருந்து பல சலுகைகள் பற்றியும், பங்குசந்தையின் கட்டுப்பாட்டு அமைப்பான செபி இவற்றை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என அறிக்கையில் கேள்வி எழுப்பியது.

இந்த அறிக்கை பற்றி கருத்து வெளியிட்ட அதானி நிறுவனம், வேண்டுமென்றே, தொடர் பங்கு ஆரம்பிக்கப்போவதால் நிறுவனத்தின் மேல் உண்மைக்கு புறம்பான விஷயங்களை கூறி ஷார்ட் செல்லிங்கில் லாபம் பார்ப்பதற்காக அறிக்கை வெளியிட்டுள்ளது ஹிண்டன்பர்க் நிறுவனம் என தெரிவித்தனர். மேலும் இந்தியா அல்லது அமெரிக்காவில் இந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறப்போவதில்லை என தெரிவித்தது.

ஆய்வறிக்கை வெளியாகி இருந்தாலும் ஆங்கர் முதலீட்டாளர்கள் பிரிவில் ரூ. 6000 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.9000 கோடி அளவிற்கு விண்ணப்பங்கள் வந்திருந்தன. எல்.ஐ.சி, ஹெச்.டி.எஃப்.சி லைஃப், எஸ்.பி.ஐ லைப் போன்ற முன்னனி நிறுவனங்கள் இந்த பிரில் விண்ணப்பித்திருந்தன. Gautam Adani: அதானிக்கு எதிராக அமெரிக்காவில் இருந்து வந்த ஆப்பு.. ரூ.2,100 கோடி இந்திய அதிகாரிகளுக்கு இலஞ்சம்.. பேரதிர்ச்சி.!

ஷார்ட் செல்லிங் நிறுவனம் என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகள் விலை குறையும் என்று கருதி தம்மிடம் இல்லாத பங்குகளை விற்பனை செய்வது ஆகும். அதற்கு ஏற்ப அந்த நிறுவன பங்குகளின் விலை குறைந்தால் மீண்டும் அந்தப் பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி லாபம் பார்க்க முடியும். இவ்வாறு பங்குகளை விற்று விலை குறையும்போது வாங்கி அதிக லாபம் பார்க்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஹிட்டன்பர்க் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் இதுவரை 30 நிறுவனங்களை பற்றிய ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. ஆய்வறிக்கை வெளியான நாளிலேயே அந்த நிறுவனங்கள் 15% விலை குறைந்தது. அடுத்த 6 மாதங்களில் 26% குறைந்தது.

அப்போது அதானி குழுமத்திற்கு எதிரான 2 ஆண்டுகளாக திரட்டப்பட்ட ஆய்வறிக்கை அதானி குழும முதலீட்டாளர்களைகளையும் இந்திய பங்குச் சந்தையையும் சற்று பயத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் மற்றொரு குற்றச்ச்சாட்டில் அதானி நிறுவனம் சிக்கியுள்ளது. முதலீடு செய்யும் நிறுவனத்தின் கடன்கள் பற்றியும் நிலைப்பாடு பற்றியும் முதலீட்டாளர்கள் கண்காணித்து வர வேண்டும்.

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement