Viral Video: கண்ணீருடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய பெண் ஊழியர்... வைரலாகும் வீடியோ..!

திருநெல்வேலி மாவட்டத்தில் கண்ணீருடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய பெண் ஊழியரின் வீடியோவானது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.

Viral Video (Photo Credit: @backiya28 X)

ஜனவரி 12, திருநெல்வேலி (Tirunelveli): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, தச்சநல்லூரைச் சேர்ந்த லீமா பாளையில் உள்ள ரேஷன் கடையில் பொங்கலை முன்னிட்டு ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபட்ட போது அவருடைய செல்போனுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பின் மறுமுனையில் இருந்தவர் லீமாவின் சகோதரர் இறந்த செய்தியை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த லீமா செய்வதறியாமல் கண்ணீர் விட்டு அழுதார். இருப்பினும் கண்ணீரை துடைத்து விட்டு பணியினை செய்தார். தற்போது கண்ணீருடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய இவரின் வீடியோவானது  இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. Tamil Nadu Weather Report: விடைபெறும் வடகிழக்கு பருவமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement