Suicide by Jumping from the Fourth Floor: நான்காவது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை; நொடியில் நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி செயல்.!

வீட்டுவசதி வாரிய ஆணைய அலுவலகத்தில் கணக்குத்துறையில் வேலை பார்த்து வந்த இளைஞர் திடீரென அலுவலக வளாகத்திலேயே தற்கொலை செய்துகொண்டார்.

Suicide by Jumping from the Fourth Floor: நான்காவது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை; நொடியில் நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி செயல்.!
Raipur Housing Board Office Staff Suicide (Photo Credit: @ManojSh28986262 X)

ஜூலை 06, ராய்ப்பூர் (Chhattisgarh News): சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர், ராக்கி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் நரேஷ் சாஹு. இவர் ராய்பூர் நகராட்சி வீட்டுவசதி வாரிய ஆணையத்தில், கணக்குத்துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இவர் வழக்கம்போல தனது பணிக்கும் சென்றுள்ளார். Newborn Dies as Doctor Cuts Genitals: பிரசவத்தின்போது குழந்தையின் அந்தரங்க உறுப்பை வெட்டிய மருத்துவர்; பச்சிளம் பிஞ்சு துடிதுடித்து பலி.! 

நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்த சோகம்:

இந்நிலையில், நேற்று பணி நேரத்தின்போது திடீரென தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தவர், கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். படுகாயத்துடன் மீட்கப்பட்ட அவரை மருத்துவமனையில் சக ஊழியர்கள் அனுமதித்தபோது, அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. TN CM MK Stalin on BSP Armstrong Killed: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்; முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்.! 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த ராக்கி நகர காவல் துறையினர், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாஹுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவர் எதனால் தற்கொலை செய்துகொண்டார்? என விசாரணை நடந்து வருகிறது.

(The above story first appeared on LatestLY on Jul 06, 2024 03:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).