Stone Pelting on Moving Train: விரைவு இரயில் மீது கல்வீசி தாக்குதல்; பயணி காயம்.. பீகாரில் பகீர் சம்பவம்.!

இருதரப்பு மோதல்களில் இயங்கும் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் வன்முறை காலங்களில் நடந்து வந்த நிலையில், தற்போது அவை சகஜமான ஒன்றாக மாறி வருகிறது.

Stone Pelting on Moving Train (Photo Credit: @NDTV X)

ஆகஸ்ட் 05, பாட்னா (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் - ஜெயநகர் (Bhagalpur Jayanagar Express Train), நேற்று தபங்கா - காகர்காட்டி பகுதி இடையே சென்றுகொண்டு இருந்தது. அச்சமயம் இரயில்வே தடுப்பு கம்பிகளின் மீது அமர்ந்து இருந்த நபரொருவர், திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறார். இரயில் மீது கல்வீசி நடத்தப்பட்ட தாக்குதலில், இரயிலில் பயணம் செய்த ஒருவரின் மூக்கு பகுதி உடைந்து இரத்தம் கொட்டியது. பாதிக்கப்பட்ட பயணிக்கு எதிர்திசையில் அமர்ந்திருந்த நபர், எதற்ச்சையாக வீடியோ எடுத்தபோது இந்த சம்பவம் கேமிராவில் பதிவாகி இருக்கிறது. தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது. Temple Wall Collapsed: கோவிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் பரிதாப பலி; நெஞ்சை உலுக்கும் சோகம்.! 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement