Canara Bank Fire: வங்கியில் திடீரென பற்றிய தீ.. மாடியில் இருந்து குதித்து உயிர்தப்பிய பணியாளர்கள்..!

இரவு நேரத்தில் வங்கிப்பணியாளர்கள் அலுவலக பணியில் மும்மரமாக ஈடுபட்டு கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக பதற்றம் நிலவியது.

Canara Bank Fire (Photo Credit: @ANI X)

நவம்பர் 21, உத்திரபிரதேசம் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள கட்டிடத்தில் கனரா வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு பணியாளர்கள் வங்கியின் கதவை அடைத்துவிட்டு, தங்களின் அலுவலக பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென வங்கியின் நுழைவு வாயில் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பணியாளர்கள் பதறிப்போன நிலையில், அவர்களில் சிலர் தங்களின் பைகளை கீழே போட்டு, ஜன்னல் வழியே குதித்து உயிர்தப்பினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு & மீட்பு படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது. தீ விபத்திற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. UP Shocker: வரதட்சணை கொடுமையால் துயரம்: 21 வயது பெண் காவலர் மர்ம மரணம்..! கண்ணீரில் உறவினர்கள்..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement