Telangana Republic Day Celebration: ஆளுநராக மூவர்ணக்கொடியை ஏற்றிய தமிழிசை சவுந்தர்ராஜன்; தெலுங்கானாவில் குடியசுத்தின கொண்டாட்டம்.!

தெலுங்கானா மாநில ஆளுநரான தமிழிசை, இன்று குடியரசு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு மூவர்ண கொடியை ஏற்றிவைத்து படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

Republic Day Celebration Telangana (Photo Credit: @airnewsalerts X)

ஜனவரி 26, ஹைதராபாத் (Telangana News): வளமான கலாச்சாரம், பாரம்பரியம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவில் முன்னேற்றம், சாதனை, பாதுகாப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் பொருட்டு அண்ணல் அம்பேத்கரால் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு, நாடாளுமன்றத்தில் அவை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை நினைவுகூறும்பொருட்டு, ஜனவரி 26ம் தேதி குடியரசு தினமாக சிறப்பிக்கப்படுகிறது. இந்திய தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவரால் மூவர்ணக் கொடியேற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து மாநில தலைநகர்களில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் சார்பில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது. தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் (Tamilisai Soundararajan), இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார். அவருடன் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியும் (Revanth Reddy), அவரது தலைமையிலான அமைச்சரவையும் இடம் பெற்றிருந்தனர். Republic Day in Tamilnadu: மூவர்ணக்கொடியை ஏற்றினார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி..! குடியரசு தின கொண்டாட்டங்கள்.! 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement