Thanjavur Crime: ஓரினசேர்க்கை லீலை, உடலுறுப்பு விற்பனை?... உடலை துண்டுதுண்டாக கூறுபோட்டு தஞ்சாவூரில் இளைஞர் கொடூர கொலை.!
ஆண்மைக்குறைவுக்கு மருந்து தயாரித்து கொடுத்த சித்த வைத்தியர், தன்னிடம் வைத்தியம் பெற வந்த இளைஞரை தனது வலையில் வீழ்த்த நினைத்து கொடூர கொலை செய்த பயங்கரம் தஞ்சாவூரில் நடந்துள்ளது.

நவம்பர் 21, தஞ்சாவூர் (Thanjavur Crime News): தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் அசோக்ராஜன் (வயது 27). சென்னையில் கால் டாக்சி ஓட்டுநராக ஏழை பார்க்கிறார். தீபாவளிக்கு சொந்த ஊர் வந்தவர், நவம்பர் 13ம் தேதி சென்னை புறப்பட்ட நிலையில், அங்கு செல்லவில்லை.
அவர் குறித்த எத்தகவலும் இல்லாத காரணத்தால், குடும்பத்தினர் சோழபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை செய்தபோது, இறுதியாக அசோக் ராஜன், சோழபுரம் கிழக்குத்தெருவில் இருக்கும் சித்த மருத்துவர் கேசவ மூர்த்தியின் வீட்டிற்கு சென்றது உறுதியானது.
இதனையடுத்து, அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டதைத்தொடர்ந்து, அதிர்ச்சியூட்டும் தகவலுடன் அசோக் ராஜன் படுகொலை செய்யப்பட்டது அம்பலமானது. அசோக் ராஜனின் உடலும் கேசவ மூர்த்தியின் வீட்டில் புதைக்கப்பட்ட நிலையில், தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. IMCR Research about Heart Attack: இளைஞர்களிடம் மாரடைப்பு ஏற்படுவதற்கு தடுப்பூசி தான் காரணமா?.. ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் புதிய தகவல்.!
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கிடைத்த அதிர்ச்சியூட்டும் தகவல் பின்வருமாறு.,
கேசவமூர்த்தி சித்த வைத்தியராக இருந்து வந்த நிலையில், ஆண்மைக்குறைவை போக்க பலருக்கும் மருந்து கொடுத்து வந்துள்ளார். இதற்காக வீட்டிலும் கஞ்சா செடி, மூலிகை பயன்படுத்தி மாத்திரை தயாரித்து இருக்கிறார். இந்த மாத்திரையை அசோக்ராஜனும் உபயோகம் செய்து வந்துள்ளார்.
மாத்திரை கொடுத்து அசோக் ராஜனுக்கு வலைவிரித்த கேசவமூர்த்தி மாத்திரை கொடுத்தபோது, அதனால் ஏற்பட்ட உடல் வலி தாங்க இயலாமல் மூச்சடைப்பு ஏற்பட்டு அசோக் ராஜன் மயங்கி இருக்கிறார். இதனால் கொலை வழக்கில் சிக்குவோம் என பயந்த கேசவமூர்த்தி, அசோக்கை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். Chithha on HotStar: மக்களின் பேராதரவைப்பெற்ற, சித்தா திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் தேதி அறிவிப்பு..!
பின்னர், உடலை ஆடு வெட்டும் கத்திக்கொண்டு துண்டு துண்டாக வெட்டி, தோலை உரித்து, விலா எலும்புகளை உடைத்து நொறுக்கி, வீட்டின் பின்புறம் கழிப்பறை கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் குழிதோண்டி புதைத்துள்ளார். இவர் கொடுத்த தக்வின் பேரில் அதிகாரிகள் உடலை தோண்டிய போது, சில உறுப்புக்கள் மாயமாகி இருந்தன.
இதனால் உடல் உறுப்புகளை விற்பனை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதால், உடலுறுப்பு திருடி விற்பனை செய்யும் கும்பலோடு தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடந்து வருகிறது. கேசவ மூர்த்தியின் டைரியை கைப்பற்றியபோது, அதில் அரசியல் பிரமுகர்கள் உட்பட 194 பேரின் பட்டியலும் இருந்துள்ளது.
இதனால் கேசவ மூர்த்தியின் பட்டியலில் உள்ள அரசியல் பிரமுகர்கள் யார்? அவர்கள் சிகிச்சை பெற்றவர்களா? தனிப்பட்ட பட்டியலில் அவர்களின் பெயர் இருக்க காரணம் என்ன? என விசாரணை நடந்து வருகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)