ISRO's Aditya-L1 Captures Solar Flares: சூரிய புயலின் புகைப்படம்.. ஆதித்யா எல்-1 விண்கலத்தின் அப்டேட்..!

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் அனுப்பிய புதிய ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

Aditya L1 (Photo Credit: @ISROSpaceflight X)

ஜூன் 10, புதுடெல்லி (New Delhi): இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனை ஆய்வு செய்ய 2008 ஜனவரியில் ‘ஆதித்யா–1’ எனும் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் ‘ஆதித்யா எல்–1’ (Aditya L-1 ) ஆக மாற்றம் அடைந்தது. தொடர்ந்து வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் (IIA), வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம் (IUCAA), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் (IISER) ஆகிய மையங்கள் பங்களிப்புடன் ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த விண்கலம் சுமார் 4 மாதகாலமாக (127 நாட்கள்) சூரியனை நோக்கி சீராக பயணித்து. இந்நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் சம புவிஈர்ப்பு விசையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சூரியனை பூமி சுற்றும்போது, அதற்கு ஏற்ப சூரியனை ஆதித்யா விண்கலமும் பின் தொடரும். எல்-1 என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான ஒரு குறிப்பிட்ட புள்ளியை குறிக்கும் லாக்ரேஞ்ச் பாயிண்ட் என்ற இடமாகும். எல்-1 என்ற இடத்திலிருந்து எவ்வித குறிக்கீடும் இன்றி சூரியனை ஆராய முடியும். மேலும் 5 ஆண்டுகளுக்கு ஆய்வுப்பணிகளை ஆதித்யா மேற்கொள்ள உள்ளது. TN Weather Report: தமிழகத்தின் இன்றைய வானிலை நிலவரம்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. விபரம் உள்ளே..!

இந்நிலையில் மே மாதம் சூரியனின் இயங்குநிலை எப்படி மாற்றம் அடைந்தது என்பதை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்து பூமிக்கு அனுப்பியது. இஸ்ரோவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படங்களை வெளியாகி வைரலாகப் பரவி வருகின்றன. இந்தப் புகைப்படங்கள் சூரியனின் ஆற்றல் மிகுந்த செயல்பாடுகளைக் காட்டுவதாகவும் கூறியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement