New Rules From 1 August: ஆகஸ்ட் 1 முதல் யுபிஐ-ல் வரப்போகும் மாற்றங்கள்.. தெரிஞ்சிக்கோங்க மக்களே.!
நாளை (ஆகஸ்ட் 1) முதல் யுபிஐ ல் நிகழப்போகும் மாற்றங்களின் லிஸ்ட் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
ஜூலை 31, புதுடெல்லி (New Delhi News): என்.பி.சி.ஐ (NPCI) எனப்படும் தேசிய பரிவர்த்தனை கழகம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் யுபிஐ பரிவர்த்தனைக்கான புதிய விதிமுறைகளை அதிரடியாக அமலுக்கு கொண்டு வருகிறது. கடந்த ஜூன் 30-ம் தேதி முதல் இந்திய தேச கொடுப்பனவுக் கழகம் சார்பில் பணப்பரிவர்த்தணையின் போது பணம் செலுத்தும் நபரின் பேங்கிங் அக்கவுண்ட் நம்பர் மட்டுமே காண்பிக்கப்படும் எனவும், பெயர்கள் போன்ற விஷயங்கள் இனி காண்பிக்கப்படாது எனவும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் யுபிஐ-ல் மீண்டும் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. அதன்படி நாளை முதல் அமலுக்கு வரும் யுபிஐ கட்டுப்பாடுகள் குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம். AI Job Impact List: 40 வேலைகளுக்கு AI வைத்த ஆப்பு.. உங்க வேலை என்ன? கவனமாக இருங்க.. லிஸ்ட் இதோ..!
ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் யுபிஐ கட்டுப்பாடுகளின் லிஸ்ட்:
- ஜிபே(GPay), போன்பே(PhonePe), பேடிஎம் (Paytm) உள்ளிட்ட யுபிஐ ஆப்களில் இனி நாள் ஒன்றுக்கு 50 முறை மட்டுமே அதிகபட்சமாக பேலன்ஸ் சரிபார்க்க இயலும். முன்னதாக நாம் விரும்பும் நேரத்தில் நமது பேலன்ஸ் சரிபார்க்க முடிந்த நிலையில், ஆகஸ்ட் 1 முதல் அதற்கு கட்டுப்பாடு வர இருக்கிறது.
- மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடர்பான விபரத்தை நாள் ஒன்றுக்கு 25 முறை மட்டுமே பார்க்கலாம்.
- இனி ஆட்டோ பேமென்ட் பரிவர்த்தனை எந்த நேரத்திலும் நடப்பதற்கு பதில் குறிப்பிட்ட நேரம் மட்டும் பரிவர்த்தனை நடைபெறும் செயல்முறைக்கு கொண்டு வரப்படும்.
- பரிவர்த்தனை நிலுவையில் இருக்கும் பட்சத்தில் அதனை மூன்று முறை மட்டுமே சரிபார்க்கலாம். ஒவ்வொரு முறை முயற்சிக்கும் இடையே 90 வினாடிகள் இடைவெளிக்கு பின்னர் அடுத்த முயற்சியை மேற்கொள்ளலாம்.
(The above story first appeared on LatestLY on Jul 31, 2025 01:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

