Surrogate Woman Dies: வாடகைத்தாய் ஒன்பதாவது மாடியில் இருந்து விழுந்து பலி.. கொலையா..? தற்கொலையா?!
தெலுங்கானாவில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருந்து விழுந்து வாடகைத்தாய் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 28, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், ராய்துர்க்கில் (Raidurg) உள்ள மை ஹோம் பூஜா என்ற ஆடம்பரமான குடியிருப்பு கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில் இருந்து பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்தார். குழந்தை இல்லாத தம்பதியருக்கு வாடகைத்தாயாக (Surrogate Woman) நிச்சயிக்கப்பட்ட 25 வயது பெண், நேற்று முன்தினம் (நவம்பர் 26) குடியிருப்பு கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். Student Dies By Suicide: பள்ளி மாணவர் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை.. காரணம் என்ன..?
இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், இருந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் தம்பதியரின் குடியிருப்பில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் தற்கொலை என்று நம்பப்பட்ட விசாரணையில், பால்கனியில் கட்டப்பட்டிருந்த இரண்டு புடவைகளும், துப்பட்டாவும் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவள் தப்பிக்க முயன்றிருக்கலாம் எனக் கருதினர். வாடகைத் தாய்க்கு வேலைக்கு அமர்த்திய ராஜேஷ் பாபு என்பவர் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவரது கணவர் குற்றம் சாட்டினார்.
வாடகைத் தாய் முறை அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகவும், அவர் இன்னும் கர்ப்பமாகவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். வாடகைத் தாய்க்கு ரூ.10 லட்சம் தருவதாக அவர் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ராஜேஷ் பாபு மீது தற்கொலைக்கு தூண்டியதாக ராயதுர்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)