நவம்பர் 27, ஹரியானா (Haryana News): ஹரியானா மாநிலம் ரோக்தக்கைச் சேர்ந்த 16 வயது தேசிய அளவிலான கூடைப்பந்து வீரர் ஹர்த்திக் ரதி, தனிப்பயிற்சிக்காக மைதானத்தில் இருந்தபோது விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். கூடைப்பந்து வளையத்தில் கைப்பிடித்து தொங்கும் முயற்சியின் நடுவே, கம்பம் திடீரென வளைந்து அவர்மீது இடிந்தது. தலையிலும் உடலின் பல பகுதிகளிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்ட ஹர்த்திக் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சைக்குப் பிறகும் உயிரிழந்தார். சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இளம் வீரருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஹரியானா ஒலிம்பிக் சங்கம் மாநில அளவிலான அனைத்து விளையாட்டு நிகழ்வுகளையும் மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கே.ஏ. செங்கோட்டையன்.. தவெகவில் இணைய வாய்ப்பு.! 

விளையாட்டு வீரருக்கு நேர்ந்த சோகத்தின் பதறவைக்கும் காட்சிகள்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)