GLEX 2025: இந்தியாவில் 250க்கும் மேற்பட்ட விண்வெளி தொடக்க நிறுவனங்கள்.. பிரதமர் மோடி பெருமிதம்..!

2025 உலகளாவிய விண்வெளி ஆய்வு மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி இந்தியாவின் விண்வெளி சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார்.

PM Narendra Modi (Photo Credit: @ians_india X)

மே 07, டெல்லி (Delhi News): இந்தியாவின் விண்வெளி துறை குறித்து எடுத்துரைத்த பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), நாட்டின் ஆர்வம், தைரியம் மற்றும் கூட்டு முன்னேற்றத்தை வலியுறுத்தியுள்ளார். உலகளாவிய விண்வெளி ஆய்வு மாநாடு (GLEX), 2025இல் பேசிய பிரதமர் மோடி, செவ்வாய் மற்றும் சந்திரனுக்கான வெற்றிகரமான பயணங்கள், 34 நாடுகளுக்கு 400க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஏவுதல் மற்றும் வரவிருக்கும் ககன்யான் பணி உள்ளிட்ட முக்கிய சாதனைகளை எடுத்துரைத்தார். Operation Sindoor: துல்லிய தாக்குதல்.. மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பயங்கரவாதிகளை வேரறுத்த இந்தியா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

விண்வெளி பயண சாதனை:

தொடர்ந்து பேசிய அவர், விண்வெளி என்பது வெறும் இலக்கு மட்டுமல்ல. இது ஆர்வம், தைரியம் மற்றும் கூட்டு முன்னேற்றத்தின் பிரகடனம் ஆகும். 1963ஆம் ஆண்டு ஒரு சிறிய ராக்கெட்டை ஏவியதிலிருந்து சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாக மாறியது வரை இந்தியாவின் விண்வெளிப் பயணம் பெரும் சாதனை படைத்து வருகிறது. இந்தியாவின் விண்வெளி சாதனைகள் குறிப்பிடத்தக்க அறிவியல் மைல்கற்கள் என்று அவர் வலியுறுத்தினார். 2014ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்து இந்தியா வரலாறு படைத்தது. சந்திரயான்-1, சந்திரனில் தண்ணீரைக் கண்டறிய உதவியது. சந்திரயான்-2, சந்திரனின் மிக உயர்ந்த தெளிவுத்திறன் படங்களை வழங்கியது. சந்திரயான்-3, சந்திர தென் துருவத்தைப் பற்றி தெளிவுபடுத்தியது.

இஸ்ரோ-நாசா கூட்டணி:

வரும் காலங்களில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான இஸ்ரோ-நாசா கூட்டுப் பயணத்தின் ஒரு பகுதியாக, ஒரு இந்திய விண்வெளி வீரர் விண்வெளிக்குச் செல்வார். 2035க்குள் பாரதியே அந்தரிக்ஷ் நிலையம் ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பில் புதிய எல்லைகளைத் திறக்கும். 2040க்குள் சந்திரனில் ஒரு இந்திய தடம் பதியும் என்று பிரதமர் மோடி கூறினார். விண்வெளி ஆராய்ச்சி, விண்வெளி நிர்வாகத்தை மேம்படுத்துகிறது, வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது மற்றும் தலைமுறைகளை ஊக்குவிக்கிறது என்று கூறினார்.

மோடி பெருமிதம்:

இரயில்வே பாதுகாப்பு முதல் வானிலை முன்னறிவிப்பு வரை, எங்கள் செயற்கைக்கோள்கள் ஒவ்வொரு இந்தியரின் நலனையும் கவனித்துக் கொள்கின்றன. எங்கள் விண்வெளித் துறையை தொடக்க நிறுவனங்கள், தொழில்முனைவோர் மற்றும் இளம்தலைமுறையினருக்கு நாங்கள் திறந்துள்ளோம். இந்தியாவில் 250க்கும் மேற்பட்ட விண்வெளி தொடக்க நிறுவனங்கள் உள்ளன. அவை செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் அதிநவீன முன்னேற்றங்களுக்கு பங்களிக்கின்றன என்றும், பல பணிகள் பெண் விஞ்ஞானிகளால் வழிநடத்தப்படுவது மிகவும் ஊக்கமளிக்கிறது என்றும் பிரதமர் மோடி பெருமிதம் கொண்டார்.

இந்தியாவின் விண்வெளி சாதனை குறித்து பேசிய பிரதமர் மோடி:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement