Family Dies By Suicide: கடன் தொல்லை; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விஷம் குடித்து தற்கொலை..!

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர், விஷம் குடித்து விட்டு, கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Poison | Death File Pic (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 25, மாண்டியா (Karnataka News): கர்நாடக மாநிலம், மாண்டியா (Mandya) மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டணாவின் கஞ்சாம் கிராமத்தில் வசித்தவர் மாஸ்தப்பா (வயது 65). இவரது மனைவி ரத்னம்மா (வயது 45). இத்தம்பதிக்கு லட்சுமி (வயது 18) என்ற மகள் உள்ளார். மாஸ்தப்பா ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இவர், குடும்ப தேவைக்காக மூன்று லட்சம் ரூபாய் உட்பட பல இடங்களில், சுமார் ரூ.12 லட்சம் கடன் வாங்கினார். Kolkata Earthquake: வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு..!

மூவர் தற்கொலை:

இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் கடனை அடைக்கும்படி, நெருக்கடி கொடுத்தனர். இவர்களின் நெருக்கடியை தாக்குபிடிக்க முடியாமல், தங்களின் வீட்டை விற்று, கடனை அடைக்க, மாஸ்தப்பா முடிவு செய்திருந்தார். இதனிடையே, கடன்காரர்கள் சிலர் நேற்று (பிப்ரவரி 24) காலை அவரது வீட்டிற்கு வந்து தகராறு செய்தனர். இதனால் மிகவும் மன வேதனை அடைந்த அவர், சிறிது நேரம் கழித்து மாஸ்தப்பா தன் ஆட்டோவில், மனைவி, மகளுடன் மாண்டியாவின், சந்தகாலு அருகிலுள்ள வி.சி. கால்வாய்க்கு சென்றுள்ளார். அங்கு ஆட்டோவை நிறுத்தி விட்டு, மூவரும் விஷம் குடித்துவிட்டு, கால்வாயில் குதித்து தற்கொலை (Suicide) செய்துகொண்டனர்.

தீவிர விசாரணை:

இதனைப்பார்த்த சிலர், உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாண்டியா ஊரக காவல்துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன், கால்வாயில் இருந்து மாஸ்தப்பா, ரத்னம்மா உடல்களை மீட்டனர். மேலும், அவரது மகளின் உடலை தேடி வருகின்றனர். இதுகுறித்து, மாண்டியா ஊரக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now