Cancer In Plastic Bottle: தினமும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிக்கிறீர்களா..? நீங்கள் கவனிக்க வேண்டியவை..!

பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தண்ணீர் மற்றும் பிற பானங்களை பருகுவதை தவிர்த்தால், ரத்த அழுத்தம் குறைகிறது என ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

Plastic Bottle (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 06, சென்னை (Health Tips): பிளாஸ்டிக் பயன்பாடு உலகம் முழுவதும் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. பல நாடுகளில் இந்த பிளாஸ்டிக்கை (Plastic) அறிவியல் ரீதியாக மறுசுழற்சி செய்ய முடியவில்லை. இந்தியா போன்ற பல நாடுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் பெரிய சவால்களை எதிர்கொள்கின்றன. இந்நிலையில், மைக்ரோபிளாஸ்டிக்ஸ் (Microplastics) இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், 'பிளாஸ்டிக் பாட்டில்களில் (Plastic Bottles) இருந்து தண்ணீர் குடிப்பதால் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இரத்த ஓட்டத்தில் நுழைவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்' என்று கண்டறியப்பட்டுள்ளது.

மைக்ரோபிளாஸ்டிக்:

மைக்ரோபிளாஸ்டிக் என்பது நமது உணவு மற்றும் நீர் விநியோகத்தின் பெரும்பகுதியில் காணப்படும் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் ஆகும். இவைகள் நம் உணவு மூலமாக, இந்த துகள்கள் குடல் மற்றும் நுரையீரலில் உள்ள செல் தடைகளை ஊடுருவி, இரத்த ஓட்டம் மற்றும் உடலில் உள்ள மற்ற திசுக்களுக்கு செல்லும். இவை நாளடைவில் பெரும் பாதிப்பை உண்டாக்கும். Soft Drinks: குளிர்பானம் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனை; அதிர்ச்சியை தரும் பகீர் தகவல்.!

இரத்த அழுத்தத்தை குறைக்கும்:

கடந்த 2018-ஆம் ஆண்டில் மட்டும், மைக்ரோபிளாஸ்டிக்ஸின் பாதிப்பாக இதய ஆரோக்கியம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் புற்றுநோயுடன் கூட மாயோ கிளினிக் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் சுகாதார அமைப்புக்கு $289 பில்லியன் செலவாகும். ஆஸ்திரியாவில் உள்ள டான்யூப் தனியார் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்ட ஆய்வில், 'பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களில் இருந்து தண்ணீர் மற்றும் பிற பானங்களை உட்கொள்வதை நிறுத்திவிட்டு, 2 வாரங்களுக்கு குழாய் தண்ணீரை மட்டுமே நேரடியாக குடித்தபோது இரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்துள்ளது' என்பது கண்டறியப்பட்டது. ஆய்வின் முடிவுகள், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று தெரிகிறது.

மனிதர்கள் ஒவ்வொரு வாரமும் 5 கிராம் மைக்ரோபிளாஸ்டிக் அளவை பயன்படுத்துகிறார்கள் என்று விஞ்ஞானிகள் முன்பே கண்டறிந்தனர். மேலும், கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்ட திரவங்களிலும் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் முழுமையான ஆராய்ச்சிக்குப் பிறகு, பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதன் அடிப்படையில், குழாய் நீரை கொதிக்கவைத்து, வடிகட்டுவது மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதை கிட்டத்தட்ட 90% குறைக்கலாம் என்று தனி ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement