Symptoms of Dengue: மழைக்காலத்தில் பரவும் டெங்கு.. அறிகுறிகள் என்ன?.. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?.!
டெங்குவால் கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு உரிய சிகிச்சை விரைந்து வழங்கப்பட வேண்டும்.
அக்டோபர் 17, சென்னை (Health Tips): மழைக்காலத்தில் மக்களை பெரும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் நோய்களில் டெங்குவிற்கு மிக முக்கிய இடம் இருக்கிறது. கடும் காய்ச்சல், வயிற்று வலி, தலைவலி, உடல் வலி, மூட்டு வலி, கண் வலி, வாந்தி, களைப்பு போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
உடலில் உள்ள எலும்புகளை முறித்தார் போல் மூட்டுகளிலும் டெங்கு காய்ச்சல் காரணமாக வலி ஏற்படும். இதில், வாந்தி-வயிற்றுவலி போன்றவை ஆபத்தான அறிகுறிகள் என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது. சிலருக்கு ஏழு நாட்களில் காய்ச்சல் சரியாகவிடும்.
ஒரு சிலருக்கு அவை குறையாமல் இருக்கும். இதுவே ஆபத்துக்கான முக்கிய அறிகுறியாக இருக்கிறது. சுவாசிக்க சிரமப்பட்டு, கை-கால்கள் குளிர்ந்த நிலையில், இரத்த அழுத்தம் மற்றும் நாடித்துடிப்பு குறைந்து சுயநினைவு இழந்து இறுதி நேரத்தில் மரணமும் நிகழலாம்.
பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களின் காரணமாக பரவும் டெங்கு, இரத்தத்தில் இருக்கும் தட்டணுக்களை அழிக்கும் தன்மை கொண்டவை ஆகும். இரத்தத்தின் தட்டணுக்கள் அழியும்போது பற்களின் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர் பாதை ஆகியவற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, உரிய சிகிச்சை இல்லாத பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படலாம். Apple iPhone 15: ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போன் விற்பனை சரிவு; சீனாவில் ஆப்பிளுக்கு ஏற்பட்ட திடீர் பின்னடைவு.!
கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு உரிய சிகிச்சை விரைந்து வழங்கப்பட வேண்டும். தற்போது தமிழகத்தில் மழைக்காலம் என்பதால், டெங்கு பரவத் தொடங்கியுள்ள நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கட்டாயம் உடலுக்கு சத்துக்களை வழங்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.
டெங்கு காய்ச்சலில் இருந்து குணமாக கிவி பழத்தை சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின் சி, பொட்டாசியம், ஆன்டி ஆக்சிடென்ட் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மாதுளையில் இருக்கும் இரும்புச்சத்து, இரத்தத்தின் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். உடல் ஆற்றலையும் மேம்படுத்தும்.
ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும். நோய் எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலை வலுப்படுத்தும். பீட்ரூட்டில் இருக்கும் போலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதனால் பீட்ரூட்டை நோயாளிகள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். பீட்ரூட்டில் இயற்கையாகவே நச்சு நினைக்கும் பண்புகள் நிறைந்துள்ளதால், கல்லீரலை சுத்தப்படுத்தி அதன் செயல்பாடுகளையும் மேம்படுத்தும். கீரை வகை உணவுகளில் இருக்கும் வைட்டமின் கே, இரத்த அணுக்கள் பெருகுவதற்கு உதவி செய்கிறது. இது டெங்கு நோயாளிகளின் உடல் நலத்தை மேம்படுத்த முக்கிய பங்காற்றுகிறது. அதேபோல, பூசணிக்காயும் சாப்பிடலாம்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)