Kozhikode Hospital Fire: அரசு மருத்துவமனையில் தீ விபத்து.. 4 உயிர்கள் பரிதாப பலி..!
கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 4 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். 200 க்கும் அதிகமானோர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர்.
மே 03, கோழிக்கோடு (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 8 மணியளவில் மருத்துவமனை வளாகத்தில் திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் கரும்புகை சூழ்ந்தது. நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த இடத்திலும் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதால் பலரும் பதறிப்போயினர். Temple Stampede Death: கூட்டநெரிசலால் பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்.. கோவில் வளாகத்தில் 6 உயிர் பலி.!
4 பேர் பலி, 200 பேர் பத்திரமாக மீட்பு:
மருத்துவ உதவியாளர்கள், உறவினர்கள் துணையுடன் பல நோயாளிகள் அவசர கதியில் மருத்துவமனை வளாகத்தின் வெளியே அழைத்து வரப்பட்டனர். இதனிடையே, தீ விபத்தின் காரணமாக எழும்பிய கரும்புகையில் சிக்கி 4 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். 200 க்கும் அதிகமான பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தோரின் உடல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனை வளாகத்தில் விபத்தின்போது பதிவு செய்யப்பட்ட காணொளி:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)