தந்தையின் உடலைக்கண்டு கதறியழுத சிறுமி; மனதை உலுக்கும் காட்சிகள்..!
வேலைக்குச் சென்று வருவதாக கூறிய தந்தை மரணம் அடைந்ததை ஏற்றுக்கொள்ள இயலாமல் தவித்த சிறுமி கண்ணீருடன் பரிதவித்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ஏப்ரல் 16, நலகொண்டா (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நலகொண்டா மாவட்டம், திருமலைகிரி காவல் நிலையத்தில், தலைமை காவலராக வேலை பார்த்து வருபவர் ரமேஷ். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல வேலைக்குச் சென்று இருந்தார். அப்போது, பணியின்போதே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். Nainar Nagenthiran: பாஜக + அதிமுக இணைந்தது ஏன்? இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த நயினார் நாகேந்திரன்.!
சிறுமியின் கண்ணீர்:
தந்தையின் மறைவை அறிந்து நேரில் வந்த மகள், அப்பா., எழுந்திருங்கள் அப்பா. என்னை பாருங்கள் அப்பா. எனக்கு எல்லாமுமாக நீங்கள் தானே இருந்தீர்கள். நான் இனி எங்கே போவேன். என்னுடன் யார் விளையாடுவார்? என கூறி கதறி அழுதார். இந்த விஷயத்தை நேரில் பார்த்த பலரும் கலங்கிப்போயினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகின்றன.
மனதை உலுக்கும் காட்சிகள்:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)