PM Narendra Modi: "உங்களை எதிர்பார்த்து உலகமே காத்திருக்கிறது" - பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து.!
சுனிதாவின் வருகைக்காக ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்தனை செய்கிறது. அவர்களின் வருகைக்காக நாங்களும் காத்திருக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி பேசி இருக்கிறார்.
மார்ச் 18, புதுடெல்லி (New Delhi): அமெரிக்காவின் நாசாவில் விண்வெளி வீராங்கனையாக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams), பன்ச் வில்மோர் (Butch Wilmore) ஆகியோர், 8 நாட்கள் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையம் சென்று இருந்தனர். பின் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களின் வருகை தாமதமாகி, கிட்டத்தட்ட 285 நாட்கள் அங்கேயே தங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைகோள் உதவியுடன் அவர்கள் பூமிக்கு திரும்பிக்கொண்டு இருக்கின்றனர். இந்திய நேரப்படி, புதன்கிழமை (நாளை) அதிகாலை 03:00 மணிக்கு மேல் அமெரிக்காவின் கடற்பரப்பில் அவர்கள் தரையிறங்குவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸின் வருகையை எதிர்ப்பது ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்தனை செய்கிறது என பிரதமர் மோடி தனது செய்தியை தெரிவித்து இருக்கிறார். JIO IPL Cricket Plan: கிரிக்கெட் பிரியர்களுக்கு குட் நியூஸ்.. ஜியோ அதிரடி சலுகை.., விவரம் இதோ..!