Team India New Jersey: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025: இந்திய கிரிக்கெட் அணியின் அசத்தல் ஜெர்சி.!
பிப்.20 அன்று இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பிசிசிஐ நிர்வாகம் இந்திய அணிக்கு புதிய டி-சர்ட் வழங்கியுள்ளது.
பிப்ரவரி 18, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டிகள் பிப்ரவரி 19, 2025 முதல் தொடங்குகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 8 நாடுகளின் கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம், கடந்த 1996ம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்தியா மட்டும் பாகிஸ்தான் நாட்டுக்கு செல்லாது என அறிவித்துவிட்டதால், இந்திய அணி பங்கேற்கும் போட்டியால் துபாயில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. பாகிஸ்தானுக்கு இந்தியா வரவில்லை என, கராச்சி மைதானத்தில் சாம்பியன்ஸ் ட்ராபியில் பங்கேற்கும் நாடுகளின் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டபோது, இந்தியாவின் கொடி புறக்கணிக்கப்பட்டது. DC Vs RCB WPL 2025: டெல்லியை துவைத்தெடுத்த பெங்களுர்.. ஸ்மிருதி பக்கா மாஸ்., ரேணுகா அபாரம்.!
ஐசிசி இந்திய தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் (Team India Squad for ICC Champions Trophy 2025):
ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் சுப்மன் ஹில் (Shubman Gill) துணை கேப்டனாக செயல்படுவார். அணியில் விராட் கோலி (Virat Kohli), ஷ்ரேயஸ் ஐயர் (Shreyas Iyer), கேஎல் ராகுல் (KL Rahul), ரிஷப் பண்ட் (Rishabh Pant), ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), அக்சர் படேல் (Axer Patel), வாஷிங்க்டன் சுந்தர் (Washington Sundar), குல்தீப் யாதவ் (Kuldeep Yadav), ஹர்ஷித் ராணா (Hashit Rana), முகம்மத் சமி (Mohd Shami), அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh), ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja), வருண் சக்கரவர்த்தி (Varun Chakravarthy) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025; இந்திய தேசியக் கொடியை புறக்கணித்த பாகிஸ்தான்.. காரணம் என்ன..?
இந்திய அணிக்கு புதிய டி-சர்ட் (Team India New Jersey for ICC Champions Trophy 2025):
துபாய்-க்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தீவிர பயிற்சி எடுத்து வருகிறது. ஏனெனில் தனது நாட்டில் இந்திய கொடியை ஏற்ற மறுத்த பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்க இந்திய தேசிய கிரிக்கெட் அணி, சாம்பியன்ஸ் டிராபி 2025ல் வெற்றிபெற இந்திய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நாளை (19 பிப்ரவரி 2025) முதல் நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையே நடைபெறுகிறது. 2025ம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியின் முதல் ஆட்டம் இதுவே என்பதால், கொண்டாட்டத்துடன் போட்டி தொடங்குகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றிபெறும் அணிக்கு ரூ.20 கோடி பரிசுத்தொகையும், இரண்டாவது ரன்னர் அணிக்கு ரூ.10 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ புதிய டி-சர்ட் வழங்கி, அதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது. ICC Champions Trophy 2025: ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் ட்ராபி 2025: வெற்றிபெறும் அணிக்கு பரிசு எவ்வுளவு தெரியுமா? அசத்தல் தகவல் இதோ.!
இந்திய அணியின் புதிய உடை:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)