RCB Vs DC WPL 2025 (Photo Credit: @WPLT20 X)

பிப்ரவரி 17, வதோதரா (Sports News): மூன்றாவது டாடா பெண்கள் பிரீமியர் லீக் (TATA Women's Premier League 2025) நான்காவது ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேபிட்டல்ஸ் (RCB Vs DC WPL 2025) அணிகள் இடையே நடைபெற்றது. டாஸை இழந்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி, 19.3 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 141 ரன்கள் சேகரித்தது. அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில் கேப்டன் மேக் 19 பந்துகளில் 17 ரன்னும், ஜெமியா 22 பந்துகளில் 34 ரன்னும், அனபெல் சுதர்லேண்ட் சார்பில் 13 பந்துகளில் 19 ரன்னும், மரிஜானா 13 பந்துகளில் 12 ரன்னும், சாரா பிரையஸ் 19 பந்துகளில் 23 ரன்னும், ஷிகா பாண்டே 15 பந்துகளில் 14 ரன்னும் அதிகபட்சமாக ரன்கள் எடுத்து இருந்தனர். இதனால் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி மறுமுனையில் களமிறங்கியது. Smriti Mandhana: 27 பந்துகளில் 50 ரன்கள்.. பேட்டிங்கில் அசத்திய ஸ்மிருதி மந்தனா.! மகளிர் பிரீமியர் லீக் ஆர்.சி.பி சாதனை.! 

பெங்களூர் அணி அசத்தல் வெற்றி:

142 ரன்களை இலக்காக வைத்து களமிறங்கிய பெங்களூர் அணியில், ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) 47 பந்துகளில் 81 ரன்னும், டன்னி வாட் (Danni Wyatt) 33 பந்துகளில் 44 ரன்னும் அடித்து அவுட் ஆனாலும், அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தனர். எல்லிஸ் 13 பந்துகளில் 7 ரன்னும், ரிச்சா கோஷ் 5 பந்துகளில் 11 ரன்னும் அடித்து அணியை வெற்றிக்கு வழிவகை செய்தனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. பெங்களூர் அணியின் முக்கிய விக்கெட்டுகளை ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி ஆகியோர் வீழ்த்தி இருந்தனர். ஸ்மிருதி இந்த போட்டியில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி இருந்தார். Renuka Singh Takes Shafali Verma Wicket: முதல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறிய ஷபலி வர்மா; பந்துவீச்சில் அசத்திய ரேணுகா சிங்.! 

அணியின் ஒரு விக்கெட் இழக்காமல், 27 பந்துகளில் 50 ரன்களை கடந்த ஸ்மிருதி மந்தனா:

நடப்பு சீசனில் முதல் 50 ரன்களை கடந்த ஸ்மிருதி:

எளிதாக எடுக்க வேண்டிய கேட்சை கோட்டை விட்ட டெல்லி அணியினர்: